மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் தாஜ்பிரகாஷ் தெருவில் உள்ள 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.