திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். நன்னிலம் சட்டமன்றத் தொகுதி முகமது முபாரக் மற்றும் திருவாரூர் தொகுதி பூண்டி கலைவாணன் ஆகியோருக்கும் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். மக்கள் நலனுக்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டுமென வலியுறுத்தினார்.